திருப்பரங்குன்றம், ஏப்.4: திருப்பரங்குன்றம் அருகில் வளைந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான மின் கம்பத்தை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பாம்பன் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே மின்கம்பம் உள்ளது. மின் வயர்களின் அழுத்தம் காரணமாக பக்கவாட்டில் ஒரு பக்கமாக சாய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் வயர்களின் அழுத்தம் காரணமாக மெல்ல மெல்ல பக்கவாட்டில் ஒரு பக்கமாக சாய்ந்து வருகின்றது.