காரிமங்கலம் அருகே பட்டகப்பட்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

காரிமங்கலம், ஏப்.3: காரிமங்கலம் அருகே பட்டகப்பட்டி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காரிமங்கலம் ஊராட்சி பேகாரள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட பட்டகப்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதமாக இப்பகுதி மக்களுக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், இப்பகுதியில் அமைக்கப்பட்ட 5க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால், குடிநீர் தேவைக்கும், வீட்டின் மற்ற உபயோகத்திற்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல்,  மெத்தனப்போக்கு காட்டி வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகத்தினர், சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். இல்லையெனில், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: