தொண்டி, ஏப் 3: தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி ஆசிரியர்கள் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். பள்ளியின் மீது அக்கரை செலுத்தும் ஆசிரியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதால் பல இடங்களில் அரசு பள்ளிகள் மூடுவிழா கண்டு வருகிறது. இந்நிலையில் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்புதாளை அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர்களிடம் வழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிஜிட்டல் பேனர் பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர். அதில் பள்ளியின் சிறப்பு அம்சம், வசதி உள்ளிட்டவை அச்சிடப்பட்டுள்ளது.