தந்தை பெரியார் திராவிடர் கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு

சீர்காழி மார்ச்.29: சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் பரசுராமன் தலைமையில் நடைபெற்றது.  

மாவட்ட துணை தலைவர் ரசித்காந்த், மாவட்ட அமைப்பாளர் தனகிருட்டினதாஸ், மாவட்ட செயலாளர் சீர்காழி பெரியார் செல்வம் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.  நகர தலைவர் மனோஜ் வரவேற்றார்.  இக்கூட்டத்தில் தமிழகத்தில் காவிபாசிசம் காலூன்ற துடித்துக் கொண்டிருக்கிறது. பாஜக கும்பலுடன் தேர்தல் கூட்டணி வைத்து கொண்டு தமிழகத்தின் தனித்தன்மையை திராவிட இயக்க சிந்தனைகளை வடவரின் காலடியில் வைத்து அடிபணிந்து நிற்கும் கட்சிகளை வன்மையாக கண்டித்தும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டுமா? வேண்டாமா? என்ற நிலையில் இனியொரு முறை பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தால் தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு பாசிசசர்வதிகார ஆட்சி முறையே மேலோங்கு என்று சமூக சிந்தனையாளர்களும், வரலாற்று அறிஞர்களும், அச்சம் தெரிவிக்கும் சூழ்நிலையில் பாஜகவை வீழ்த்திட வலுவான திமுக அணியை பொது நோக்கில் திமுக கூட்டணியை ஆதரிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: