சென்னை: தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மயிலாப்பூர் பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.தென்சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் 124வது வட்டத்தில் நேற்று காலை பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:அனைத்து ரயில் முனையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் மற்றும் ரயில் வழித்தடங்களில் சேதமடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்கவும், அம்முனையங்களை மேம்படுத்தவும் நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை அமைச்சரை தொடர்ந்து வலியுறுத்தியதன் மூலம் மத்திய அரசின் நிதி பெறப்பட்டு பல்வேறு கட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், பிரதமருக்கு கடிதம் எழுதி, பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ₹52 லட்சம் பெறப்பட்டு தொகுதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பலருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.