புள்ளி மான் வேட்டை 4 பேர் கைது

ேகாவை, மார்ச் 28: கோவை காரமடை பெரியார் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35), ராமு (47) ஆகியோர் மான் கறி வைத்திருப்பதாக நேற்று முன் தினம் தகவல் வந்தது. இதை தொடர்ந்து காரமடை ரேஞ்சர் சரவணன் உள்ளிட்டோர் அங்கே சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மான் கறியும், சமையல் செய்த கறியும், பாத்திரங்களும் இருந்தது தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், ரகுநாதன் ஆகியோருடன் சேர்ந்து கோபநாரி அருகேயுள்ள குருந்தமலை முருகன் கோயில் அடிவாரத்தில் கள்ள துப்பாக்கி மூலமாக புள்ளி மானை சுட்டு கொன்றதாகவும், மானை வீட்டிற்கு கொண்டு வந்து தோல் உரித்து கறியாக சமைத்து சாப்பிட்டதாகவும் தெரிவித்தனர். வனத்துறையினர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மான் கறி மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: