தமிழகத்தில் வாகனங்களின் அதிகரிப்பால் சிறிய நகரங்களில் கூட கனிப்பொறி வசதியுடன் கூடிய வீல் அலாய்மென்ட் மற்றும் டயர்கள் விற்பனை நிலையம் தொடக்குவது அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு ஒரு கிராமத்ததில் ஆயிரம் வீடுகளில் 20 வீடுகளில் தான் இரு சக்கர வாகனம் இருக்கும். இதபோல் நகர் பகுதியில் குறைந்து அளவு தான் இருசக்கர வாகனம் இருக்கம். இதபோல் கிராமத்தில் ஒரு சில வீடுகளில் தான் நான்கு சக்கர வாகனம் இருக்கும். தற்போது இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த வாகனங்களுக்கு தேவையான டயர்கள் வாங்க வேண்டுமெனில் பெரு நகரங்களுக்கு தான் செல்ல வேண்டும். குறிப்பாக நான்கு சக்கர வாகனங்க ளுக்கு டயர் மாற்ற வேண்டுமானால் திருச்சி, மதுரை போன்ற பெருநகரங் களுக்குதான் போக வேண்டும். ஏனென்றால் அங்குதான் கனிப்பொறி உதவியுடன் வீல் அலாய்மென்ட் பார்க்க முடியும். இதேபோல் பல்வேறு வகையான கம்பெனிகளின் டயர்களை வாங்க இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர்கள் பெரு நகரங்களை நோக்கி வருவார் கள். இதனால் அவர்களுக்கு அதிக அலைச்சல், வீண் செலவு அதிகரித்து வந்தது.