தூத்துக்குடி, மார்ச் 27:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி வாக்கு சேகரித்து வருகிறார். அவர் இன்று (27ம்தேதி) வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் கிழக்கு, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிக்கிறார். மாலை 4 மணிக்கு பட்டினமருதூரில் பிரசாரத்தை தொடங்கும் கனிமொழி தொடர்ந்து வேப்பலோடை, முத்துக்குமாரபுரம், வேடநத்தம் ஊராட்சி, வள்ளிநாயகபுரம், கே.சண்முகபுரம், சந்திரகிரி, கொல்லம்பரும்பு, மிளகுநத்தம், ஆதனூர், காட்டுநாயக்கன்பட்டி, எப்போதும்வென்றான், தளவாய்புரம், கன்னக்கட்டை, புங்கவர்நத்தம், குமரிகுளம், வாலம்பட்டி, கீழஈராலில் இரவு 9.30 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.