கொள்ளிடம், மார்ச் 26: கொள்ளிடம் அருகே ஆலாலசுந்தரம் கிராமத்தில் முறிந்து விழும் நிலையில் உள்ள இரண்டு மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலாலசுந்தரம் கிராமம் பெரிய தெருவில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மின்கம்பங்கள் அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதி வரை உடைந்தும் மின்கம்பங்களில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் விழுந்துள்ளது. இதனால் வலுவிழுந்து எந்தநேரமும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. சற்று பலமான காற்று வீசினாலே முறிந்து விழும் நிலையில் இரண்டு மின்கம்பங்களும் உள்ளன. இரண்டு மின்கம்பங்களை ஒட்டியும் பொது குடிநீர்க்குழாய்கள் உள்ளன. இந்த குழாய்கள் மூலம் இத்தெருவைச் சார்ந்தவர்கள் காலையிலும் மாலையிலும் குடிநீர் எடுத்து செல்கின்றனர்.