திருத்துறைப்பூண்டி, மார்ச் 22: திருத்துறைப்பூண்டி அருகே மகளிர் சுயஉதவி குழுவுக்கு தேர்தல் முடியும் வரை கடன் வழங்க கூடாது என பறக்கும் படையினர் எச்சரிக்கை விடுத்தனர். திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கடன் வழங்குவதாக தகவலறிந்த தாசில்தார் ராஜன்பாபு, தேர்தல் பறக்கும் படை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சப்.இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், ஏட்டு ராஜாக்கண்ணு மற்றும் போலீசார் மடப்புரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றனர்.