பேராவூரணி, மார்ச் 22: நூறு சதவீத வாக்குப்பதிவு மற்றும் நேர்மையான முறையில் வாக்களிக்க வலியுறுத்தி பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 1000 பேர், தங்களது பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி அனுப்பினர். தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை வாக்காளர்கள் நேர்மையான முறையில் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கடிதம் எழுத முடிவு செய்தனர்.