சென்னை, மார்ச் 21: சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 6க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த அறக்கட்டளையை தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் இடைக்காலமாக நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட இருந்தது. இதை எதிர்த்து அறக்கட்டளை உறுப்பினர் வக்கீல் எல்.செங்குட்டுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்காளர்களாக உள்ளனர். தற்போது 1144 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக கூறி தேர்தல் நடத்த முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 5ம் தேதி உத்தரவிட்டார்.