காஞ்சிபுரம், மார்ச் 21: நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்களுடன் மாவட்டதேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பொன்னையா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் 2019 மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், மதுராந்தகம், உத்திரமேரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு சுஜித்குமார், செங்கல்பட்டு, செய்யூர், திருப்போரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு பூபேந்திர சிங் ஆனந் ஆகியோரை தேர்தல் செலவின கணக்கு பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.