நாமகிரிப்பேட்டை அருகே பாக்கு வியாபாரியிடம் ₹8 லட்சம் பறிமுதல்

ராசிபுரம், மார்ச் 21: நாமகிரிப்பேட்டை அருகே பாக்கு வியாபாரியிடம் ₹8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பறக்கும்படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா அருகே ஆயில்பட்டி பகுதியில், பறக்கும்படை அதிகாரி தினேஷ்குமார் மற்றும் எஸ்எஸ்ஐ ராமசாமி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாமகிரிப்பேட்டையிலிருந்து ஆத்தூர் நோக்கி பைக்கில் சென்றவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, வண்டியில் ₹8 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஆத்தூர் அடுத்த சிங்கிபுரம் நாடார் தெருவை சேர்ந்த முருகேசன்(57) என்பது தெரியவந்தது. இவர் பாக்கு வியாபாரத்திற்காக பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. ஆனால், அவரிடம் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, ராசிபுரம் தாசில்தார் ஷாகுல் ஹமீதிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவர் மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் சந்திரா உத்தரவின் பேரில், ராசிபுரம் கருவூலத்தில் ஒப்படைத்

Related Stories: