விருத்தாசலம், மார்ச் 21: பண்ருட்டி மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (59). கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார். அதுவரை கோயில், குளம் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித் திரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்து, தற்போது அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அவரை அனுமதித்து அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியுள்ளனர். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இந்நிலையில் நேற்று விருத்தாசலம் இரட்டை தெரு அருகே ஏகாம்பரம் மர்மமாக இறந்து கிடந்தார்.