புதுக்கோட்டை,மார்ச்20: நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கிற்காக தனிவங்கி கணக்கு துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்காக மேற்கொள்ளப்படும் செலவினம், தேர்தல் செலவினமாக கருதப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள்வரை மேற் கொள்ளப்பட்ட செலவினம் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கணக்காக கருதப்படும். அதன்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, நாடாளுமன்ற தேர்தல் செல வினத்திற்கான உச்சவரம்பு ரூ.70லட்சமும் நிர்ணயக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ் வொரு வேட்பாளரும் அல்லது அவரின் முகவரும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை மேற்கொள்ளப்பட்ட செல வீனத்தினை தனியாக பராமரிக்க வேண்டும். மேலும் வேட்பாளர் ஒவ்வொருவரும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக் குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தன்னுடைய தேர்தல் செலவுக் கணக்குகளின் ஒரு நகலை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் பொதுகூட்டங்கள், சுவரொட்டிகள், தட்டிகள், வண்டிகள், செய்தித்தாள் அல்லது மின்னணு ஊடகத்தில் விளம்பரங்கள் போன்றவையும் வேட்பாளரின் செலவுக் கணக்கில் அடங்கும். எனவே தேர்தல் செலவினங்களுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் தனியாக வங்கிக் கண க்கு துவங்கப்பட வேண்டும் என்பதுடன் தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் இதற்காக துவங்கப்பட்ட வங்கிக்கணக்கிலிருந்து மட்டுமே செய்திட வேண்டும்.