புதுக்கோட்டை, மார்ச் 20: புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரசு பணிக்கு போலி பணி ஆணை வழங்கியது சம்பந்தமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதியை சேர்ந்த முத்துராசு மகன் கார்த்திகேயன்(23). இவர், தன்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக அரசு நியமனம் செய்து உள்ளதாகக் கூறி, பணி நியமன ஆணையை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் பணி ஆணையை கொடுத்தார். அப்போது பணிநியமன ஆணையில் முதல்வரின் கையெழுத்து போலியாக போட்டிப்பது தெரியவந்தது.