அரியலூர், மார்ச் 20: பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து திருமானூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொள்ளாச்சியில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட, பெண் சமுதாயத்தை இழிவுப்படுத்திய அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்ககோரி திருமானூர் பேருந்து நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கலைமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பத்மாவதி, மாவட்ட தலைவர் பாக்கியம், அரியலூர் ஒன்றிய செயலாளர் மலர்கொடி கண்டன உரையாற்றினர்.