கடவூர் சோனம்பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கடவூர், மார்ச் 20: கடவூர் அருகே சோனம்பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. உடையாபட்டி கால்நடை மருந்தக டாக்டர் மணிவண்ணன் தலைமை வகித்தார். பராமரிப்பு உதவியாளர் அமுதவள்ளி, மக்கள் தொடர்பு பணியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி  போடப்பட்டது. 16வது சுற்றாக நடைபெறும் இந்த முகாமில் கடவூர், பாலவிடுதி, தரகம்பட்டி, சீத்தப்பட்டி, உடையாபட்டி கால்நடை மருந்தகங்கள் மற்றும் காணியாளம்பட்டி மருத்துவமனை பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் கால்நடைகளுக்கு  அந்தந்த டாக்டர்கள்  கோமாரி நோய் தடுப்பூசி போடுவார்கள். மேலும் இந்த தடுப்பூசி முகாம் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும். இதில் சினை மாடுகள் முதல் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: