101வது பிறந்தநாள் விழா கொண்டாடிய மூதாட்டி

நாகர்கோவில், மார்ச் 20: புல்லுவிளை சிஎஸ்ஐ சபை வளாகத்தில், அருள்மணி ஆனந்த பாய் 101வது பிறந்த நாள் விழா  போதகர்  ஜாண்சன் கில்பர்ட் தலைமையில் நடைபெற்றது. போதகர் செல்லையா வரவேற்றார். ஆஸ்டின் எம்.எல்.ஏ வாழ்த்தி பேசினார். ஸ்காட் கல்லூரி  முன்னாள் பேராசிரியர் ரோலன்ஸ் குடும்ப அறிமுக உரை நிகழ்த்தினார். போதகர் வினிஷ் சதீஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அருள்மணி ஆனந்தபாயின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள், கொள்ளு பேரக் குழந்தைகள்  அன்பளிப்புகள் அளித்து ஆசி பெற்றனர். முத்துநாயகம் நன்றி கூறினார்.

வாக்காளர் அடையாள அட்டை விபரங்களை விஏஒவிடம் தெரிவிக்க வேண்டும்நாகர்கோவில், மார்ச் 20: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் 2019ஐ முன்னிட்டு குமரி மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் விடுபடா வண்ணம் தேர்தலில் வாக்களிக்க தங்கள் வசம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை விபரங்களை தங்கள் இருப்பிடம் அருகாமையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவோ சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து படிவம் 6ஐ பெற்று அப்படிவத்தில் புகைப்படத்துடன் விபரங்களை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர்கள் வசம் ஒப்படைக்கவும், இது தொடர்பாக மேலும் விபரங்களை அறிய மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக அவசர தேர்தல் தொலைபேசி எண் 1950ல் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories: