ஊத்துக்கோட்டை, மார்ச் 20: ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.ஊத்துக்கோட்டையில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் ஊத்துக்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் நேற்று முன்தினம் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.வட்ட சட்ட பணிகள் குழு உறுப்பினர்கள் வக்கீல்கள் குணசேகரன், பாலசுப்பிரமணிய குமார், மூத்த வக்கீல்கள் வெற்றி தமிழன், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் கன்னியப்பன் வரவேற்றார்.