மேச்சேரி, மார்ச் 19: நங்கவள்ளி அருகே பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹56 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், 33 பறக்கும் படைகள், 33 நிலை கண்காணிப்பு குழுவினர் வீடியோ சர்வைலன்ஸ் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இக்குழுவினர், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி ₹50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் சட்டமன்ற தொகுதி, நங்கவள்ளி-மேட்டூர் மாநில நெடுஞ்சாலையில் தெப்பகுளம் அருகே பறக்கும்படை அதிகாரி தாகூர் தலைமையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.