பெரம்பலூர்,மார்ச்19: பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதி திமுக கூட்டணி வேட் பாளர் பாரிவேந்தர்(எ) பச்சமுத்துவுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் 21ம் தேதி முசிறியில் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறி த்து, பெரம்பலூரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக ஐஜேகே கட் சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட முசிறி, தாத்தையங்கார் பேட் டைரோடு அருகே வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இதனையொட்டி முசிறி பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள்குறித்தும், திமுக கூட்டணியின ரின் பிரசார வியூகம், வேட்பாளரின் வெற்றிக்கான வழிமுறைகள் குறித்தும் நேற்று மதியம், முன்னாள்அமைச்சரும், திமுக கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாள ருமான கே.என்.நேரு நேற்று பெரம்பலூரில் ஆலோசனை நடத்தினார்.