ராமநாதபுரம், மார்ச் 19: ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், திறந்தவெளியில் இறைச்சி வெட்டி விற்பனை செய்யப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகர்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. இதுதவிர கேணிக்கரை உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் 50க்கும் அதிகமான ஆட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மீன்கடைகள் செயல்பட்டு வருகிறது. மீன்கடைகளின் இறைச்சி கழிவுகளை அகற்ற முறையான திட்டம் இல்லாததால், அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளில் கொட்டுவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. ஆடுவதைக் கூடத்தை பெரும்பாலான இறைச்சி கடைக்காரர்கள் பயன்படுத்துவதில்லை.