கீழக்கரை, மார்ச் 19: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த மார்ச் 11 முதல் 17ம் தேதி வரை புது மாயாகுளம், பாரதிநகர் கிராமங்களில் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் அலாவுதீன் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ராஜேந்திரன், முகமது சதக் பொறியியல் கல்லூரி டீன் முகமது ஜகாபர், முதல்வர் அப்பாஸ் முகைதீன், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன், கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் அப்பா சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா வரவேற்றார்.