சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சாயல்குடி, மார்ச் 19: சாயல்குடி அருகே மாரியூர் பவளநிறவள்ளியம்மன் சமேத பூவேந்தியநாதர், மேலக்கிடாரம் சிவகாமி அம்பாள் சமேத திருவனந்தீஸ்வரமுடையார், சாயல்குடி மீனாட்சியம்மன் சமேத கைலாசநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி சமேத செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் சமேத ஆதிசிவன் ஆகிய  கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள், விஷேச பூஜைகள் நடந்தது. கோயில்களிலுள்ள நந்திதேவருக்கு 11 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனைகளும், கூட்டு பஜனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: