தாம்பரம், மார்ச் 19: நன்மங்கலம் காப்பு காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. தாம்பரம் அடுத்த செம்பாக்கம் - திருமலை நகர் சாலையோரம் நன்மங்கலம் காப்புக்காடு உள்ளது. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் இந்த காட்டின் ஒரு பகுதியில், வேங்கை வாசல்பகுதி அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியின்
பின்புறம் உள்ள மைதானம் அருகில் திடீரென தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி செம்பாக்கம் - திருமலை நகர் செல்லும் வனப்பகுதி சாலை வரை பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், நன்மங்கலம் காப்புக்காட்டின் அருகில் உள்ள செம்பாக்கம், திருமலை நகர், மேடவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்தது.