கன்னியாகுமரி, மார்ச் 19: தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவதை தடுக்கவும், கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மாதந்தோறும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சஜாக் ஆபரேசன் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த மாதத்துக்கான பாதுகாப்பு ஒத்திகை கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் அதி நவீன படகில் சின்னமுட்டம் கடல் பகுதியில் இருந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.