நாகர்கோவில், மார்ச் 15: பல்வேறு துறை அலுவலர்களுக்கான மக்களவை தேர்தல் பயிற்சி வகுப்பை கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தொடங்கி வைத்தார். பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கையினை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, தலைமையில் தேர்தல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள், 117 மண்டல குழுக்களை சார்ந்த அலுவலர்களுக்கும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் தேர்தல் நடத்தை விதிகள், வாக்கபதிவு இயந்திரம் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கபட்டு வருகிறதா? என்பது குறித்து 24 மணி நேரமும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.