வந்தவாசி, மார்ச் 15: வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன்(50). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 4 வருடங்களாக வீட்டிலியே மருந்து, மாத்திரைகள் கொடுத்து கவனித்து வருகின்றனர். இவருக்கு மகேஸ்வரி(47) என்ற மனைவும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 3 மகன்களும் வெளியில் சென்று இருந்தனர். மகேஸ்வரி மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை, மருந்து என நினைத்து தவறுதலாக நாரயணன் குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.