நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு,  மார்ச் 14: ஈரோட்டில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:நாடாளுமன்ற  தேர்தல் அறிவித்ததையடுத்து  கோவை சரகத்திற்கு உட்பட்ட கோவை , ஈரோடு ,  திருப்பூர் , நீலகிரி உள்ளிட்ட எஸ்பி.,க்களுடன் பாதுகாப்பு ஏற்பாடு  குறித்து ஆலோசனை நடத்தி பாதுகாப்பு பலப்படுத்துள்ளது. அந்தந்த மாவட்ட  எஸ்பி.,க்கள், கலெக்டருடன் இணைந்து  பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு  குழுக்கள் அமைத்து  கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய்துறை  அதிகாரிகளுடன் இணைந்து கொடி கம்பம் அகற்றுதல், பிளக்ஸ் அகற்றுதல் உள்ளிட்ட  பணிகளை செய்து வருகிறோம். துணை ராணுவ படையினர் தேர்தல் நெருங்கும் நேரத்தில்  பாதுகாப்புக்கு வருவார்கள். நக்சலைட் நடமாட்டம்  உள்ள மலைக்கிராமங்களில்  ஏற்கனவே நக்சல் தடுப்பு பிரிவினர் ஆய்வு நடத்தி உள்ளனர். தேர்தல் நேரம்  என்பதால் அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.

Related Stories: