பவானி அருகே மில்லில் தீ பஞ்சு மூட்டை எரிந்து நாசம்

பவானி, மார்ச் 14:  பவானி அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த வரதநல்லூரில் கைலாசமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது.இந்த நூற்பாலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 பஞ்சு மூட்டைகளில் மின்சார கசிவால் நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்தது. இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் காந்தி தலைமையில் வந்த தீயைணப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் இதில்  50 பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.  இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: