கறம்பக்குடி, மார்ச் 12: கறம்பக்குடியிலிருந்து தஞ்சை வழியாக இயங்கிய பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. தினகரன் செய்தி எதிரொலியால் அரசு பஸ் மீண்டும் இயக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மூலம் தஞ்சாவூரில் இருந்து மறுங்குலம் ரெகுநாதபுரம் அம்புக்கோவில் வழியாக கறம்பக்குடிக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் திடீரென்று கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக 50 ஆண்டுகளாக இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீரென்று நிறுத்தப்பட்டதால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.