கரூர், மார்ச் 12: கரூர் மாவடியான் கோயில் தெருவில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாரியம்மன் கோயில் அருகே மாவடியான் கோயில் தெரு உள்ளது. இந்த பகுதியில் பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவங்கியது. இந்த பணி தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளது. இந்த பணியை விரைந்து முடித்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.