விஏஓக்கு கொலை மிரட்டல் எதிரொலி போலீசை கண்டித்து விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்

திருவாடானை, மார்ச் 8: விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்காததால் போலீசாரை கண்டித்து திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவாடானை அருகே உள்ள சிறுமலைக்கோட்டை குரூப் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சண்முகம். இவர் குஞ்சம்குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் என்பவரது இடத்தை அளந்து கொடுக்க சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஜவகர் என்பவருக்கும், விஏஓ சண்முகத்திற்கும் இடையே இடம் அளந்து கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சண்முகத்தை ஜவகர் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து விஏஓ சண்முகம் திருவாடானை போலீசில் ஜவகர் உட்பட மூன்று பேர் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் மாஸ்கோ சக்திவேல் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் நம்பு ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம காவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவலறிந்த திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் போராட்டம் நடத்திய விஏஓ சங்க நிர்வாகிகளிடம் இரவுக்குள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: