ராமநாதபுரம், மார்ச் 7: மண்டபம் அருகே கார் - டூவீலர் மோதிய விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் மனைவியுடன் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். டிரைவர் கைதானார். ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர் (42). மண்டபம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருந்தார். மனைவி பிரமீளா (எ) மாரி (32). நேற்று மாலை 3 மணியளவில் சந்திரசேகர், மனைவி பிரமீளாவுடன் டூவீலரில் மண்டபத்தில் இருந்து உச்சிப்புளிக்கு சென்று கொண்டிருந்தார். ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் அருகே சுந்தரமுடையான் பஸ்ஸ்டாப் அருகே சென்றபோது, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார், டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.