பொன்னமராவதி, மார்ச் 7: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டிக்கு செல்லும் குண்டும் குழியுமான சாலையினை புதிதாக போடுவதற்காக தோண்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் சாலைப்பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் இந்த சாலையில் சிரமத்துடன் சென்று வரும் நிலையினை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலையில் பொன்.புதுப்பட்டி நால்ரோட்டில் இருந்து வலையபட்டிக்கு ஒரு தார் சாலை செல்கிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தது. இந்த சாலையினை சீர் செய்ய கோரி தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைக்கப்பட்டது.