ராமநாதபுரம், மார்ச் 6: சிவராத்திரியை முன்னிட்டு மாவட்டத்தில் பல கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாநில கலை, பண்பாட்டுத் துறை சார்பில் முதன்முறையாக சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோயிலில் 12 மணி நேர நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை துவங்கிய நாட்டிய நிகழ்ச்சிகள் நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. நாடுமுழுவதும் 10க்கும் மேற்பட்ட பரத நாட்டிய குழுவினர் கலந்து கொண்டனர்.300 நாட்டிய கலைஞர்கள், இசைகலைஞர்கள் கலந்து கொண்டனர். ஸ்வர்ணமால்யா, ஊர்மிளா சத்தியநாராயணன், சைலஜா என புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சி நடத்தினர். இதனை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.