அறந்தாங்கி,மார்ச்6: அறந்தாங்கி பகுதி கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மகாசிவாராத்திரியை முன்னிட்டு, சிவன் மற்றும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் விடிய, விடிய நடைபெற்றன. அறந்தாங்கி அக்ரஹாரம் விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேக ஆராதணைகள் நடை பெற்றன.