கறம்பக்குடி, மார்ச் 6: கறம்பக்குடி திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக ஊராட்சி சபை கூட்டம் தெற்குதெரு, இலைகடிவிடுதி, களபம், எம் தெற்குதெரு, தீத்தானிப்பட்டி, பல்லவராயன்பத்தை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாஞ்சாலன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார். திமுக மேலிட பார்வையாளர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார். இதில் அனைத்து பெண்களும் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,