பெரம்பலூர், மார்ச் 6: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக தேர்தலின்போது ஜனநாயகக் கடமையாற்றுவோம் என்ற உறுதி மொழி ஏற்புக்கூட்டம் நடந்தது. பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தின் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக, 2019 பாராளுமன்ற தேர்தலின்போது ஜனநாயகக் கடமையாற்றுவோம், வாக்குரிமையை பயன்படுத்துவோம், வாக்கினை செலுத்துவோம். சாலைப் பணியாளர்கள் குடும்பங்கள் தோறும் இன்று (6ம்தேதி) முதல் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை நடத்துவோம் என்ற உறுதிமொழி ஏற்புக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.