கரூர், மார்ச் 6: கரூரில் எலுமிச்சம்பழம் விலை கிடுகிடு என உயர்ந்தது. கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே வெயில் உச்சத்தில் உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க எலுமிச்சை சாறு, எலுமிச்சை சோடா என அதிக அளவில் அருந்துகின்றனர். உழவர் சந்தைகளில் எலுமிச்சம் பழம் கடந்த மாதம் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வருகிறது.