பெரம்பலூர், பிப். 28: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 1ம்தேதி 3வருவாய் கிரா மங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடக்கிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தமிழக அரசால் சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது.