அரியலூர்,பிப்.28: அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கின் சுற்றுச்சுவர் சேதமாகி உள்ளதால் விளையாட்டு வீரர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூரில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுற்றுச் சுவர் இடிந்து பல வருடங்களாக உள்ளன. இவ் விளையாட்டு மைதானம் அருகில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இம் மைதானத்தில் ஹாக்கி, கால்பந்து, மைதானங்கள் உள்ளன. இவ் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்கள் விடுதியும் அமைந்துள்ளன. இம் மைதானத்தில் சுற்றுச் சுவர் மூன்று பக்கங்களில் இடிந்து சேதமாகி உள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ள ஆடு மற்றும் மாடுகள் மைதானத்தில் வந்து ஹாக்கி மற்றும் கால் பந்து மைதானத்தில் வந்து செல்கிறது, இதனால் மைதானம் அசுத்தம் ஆகிறது. விளையாட்டு வீரர்கள் காலையில் வந்து பார்த்தால் மைதானம் அசுத்தமாக இருப்பதால் அவற்றை சுத்தம் செய்துவிட்டு அதன்பிறகு தான் விளையாடி வருகின்றனர்.