மதுரை, பிப்.28: மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வகையில் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9 மணியளவில் கப்பலூரில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் நடக்கிறது. முகாமில் 80க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆயிரக்கணக்கான காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியியல், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் நர்சிங் போன்ற படிப்புகளை முடித்திருப்பவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.