தா.பழூர், பிப்.28: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தில் மின்கம்பி உரசி டிராக்டரில் எடுத்து வந்த வைக்கோல் எரிந்து சேதமானது. குவாகத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தென்கச்சி பெருமாள்நத்தத்தில் வைக்கோலை விலைக்கு வாங்கி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நேற்று சென்று கொண்டிருந்தார். வயல் நிலங்களில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதால் அதன் மின் கம்பி வைக்கோலில் உரசி தீப்பற்றியது. வயல் பகுதியில் தீப்பற்றியதால் அணைப்பதற்கான எந்த வழியும் இல்லாமல் போய்விட்டது.