அம்பத்தூர், பிப்.27: சென்னை புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, கொலை, போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதனை தடுக்கும் வகையில் முக்கிய சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கை செய்வது வழக்கம். இந்நிலையில் அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் அற்புதம், தலைமையில் ஒரு காவலர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அற்புதம், அந்தச் சாலையில் வரும் ஆறு, நான்கு சக்கர சரக்கு வாகனங்களை வழிமறித்து ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா ₹50 முதல் ₹100 ரூபாய் வரை கட்டாயம் தரவேண்டுமென மிரட்டி வசூலித்தனர். மேலும், அவர் முறையாக ஆவணங்கள் வைத்திருந்தாலும் வசூல் தான். அவர்களது வசூல் வேட்டையை சமூக ஆர்வலர் ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.