சென்னை, பிப்.27: தொழிலதிபர் வீட்டில் ₹15 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிய வேலைக்கார பெண் சிசிடிவி கேமரா பதிவு மூலம் பிடிபட்டார். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை 16வது அவென்யூவை சேர்ந்தவர் நரசிம்மன் (80). தொழிலதிபர். இவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். நரசிம்மன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வைத்திருந்த நகைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாயமானது. இதுபற்றி வேலைக்கார பெண் மற்றும் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தினார். இதன்பிறகும் வீட்டில் இருந்து 22 கிராம் நகை மற்றும் ₹3 ஆயிரம் மாயமானது.