மதுரை, பிப். 27: பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை, ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார். மதுரையில் நேற்று அவர் கூறும்போது, ‘‘அதிமுக - பாமக கூட்டணியில் அதிக அளவு பணம் கைமாறியுள்ளது. மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம் என்ற நிலையில் தற்போது அன்புமணி உள்ளார். ரூ.300 கோடி முதல் ரூ.500கோடி வரை பாமக வாங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. பெரிய கூட்டணி அமைந்தது போல அதிமுக அவர்களாகவே பெருமையடித்து கொண்டு வருகின்றனர். பாமகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் விலகி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்ததால் பாமக அழிந்துபோகும் நிலைக்கு போயிருக்கிறது. டெண்டர்களுக்காகவே ஒரு சில அதிமுக நிர்வாகிகள் எடப்பாடியுடன் உள்ளனர்.