சாயல்குடி, பிப்.26: கடலாடி அருகே உள்ள அரசு பள்ளிகள் சார்பாக மாணவர்களுக்கான கல்வி சுற்றுலா நடந்தது. கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம், மூக்கையூர், கன்னிகாபுரி, சடமுனிவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் இணைந்து மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்றனர். ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரியமான் பீச், அப்துல்கலாம் நினைவிடம், ராமநாதபுரம் பாலை ஐந்திணை மரபு பூங்கா உள்ளிட்ட இடங்களை மாணவர்கள் பார்த்து ரசித்தனர். கடற்கரை கலங்கரை விளக்கம் செயல்பாடு மாணவர்களுக்கு மீன்வளத்துறை அலுவலர்கள் விளக்கினர்.